தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக அறுகம்பே பகுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புரோ சேர்பிங் 2011 (Pro surfing Competition 2011) கடல்சருக்கல் போட்டி நிகழ்வுக்கு பிரதான தொலைத் தொடர்பு சேவைகள் வழங்குநர் அனுசரணையை வழங்க எடிசலாட் முன்வந்துள்ளது.
இதன் மூலம் அறுகம்பே பகுதியில் இடம்பெறும் இந்த களியாட்ட நிகழ்வில் கலந்துகொள்ள வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களுக்கு தொலைத்தொடர்பு, இணைய சேவைகளை வழங்க எடிசலாட் தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலிய கடல்சருக்கல் வல்லுநர்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதான அனுசரணையில் இந்த கடல்சருக்கல் போட்டி ஓகஸ்ட் 30ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இந்நிகழ்வில் 19 நாடுகளைச் சேர்ந்த கடல்சருக்கல் வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் விளையாட்டு துறைக்கு தொடர்ச்சியாக பல அனுசரணைகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்கும் எடிசலாட், ஏ பிரிவு ரகர் போட்டிகளில் கண்டி விளையாட்டு கழகம், கோல்ப் கிளாசிக் போன்ற வரிசையில் தனது மற்றுமொரு அனுசரணையாக இந்த கடல்சருக்கல் போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
அத்துடன் சர்வதேச ரீதியல் இணையம் மூலம் இந்த போட்டிகளை ஒளிபரப்பு செய்ய தனது 3.75 G வலையமைப்பு சேவைகளையும் வழங்கவுள்ளது. இந்த விளையாட்டு நிகழ்வுகளின் போது உள்நாட்டு பார்வையாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அறுகம்பே பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காகவும் பட்டம் வடிவமைக்கும் போட்டி, மணல் வீடு கட்டும் போட்டிகளையும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு எடிசலாட் அனுசரணை வழங்குவது குறித்து எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் விளையாட்டு துறைக்கு பங்களிப்பு வழங்கவும் எமக்கும் பெருமையளிக்கிறது. விளையாட்டு போட்டிகளிலிருந்து கிடைக்கும் போட்டித்தன்மையும் அனுபவத்தையும் அடிப்படையாக கொண்டே வர்த்தக நடவடிக்கைகளிலும் அவை முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் விளையாட்டு துறைக்கு அனுசரணை வழங்குவது முக்கியமானதென நாம் கருதுகிறோம். இந்த போட்டி நிகழ்வுக்கு அனுசரணை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்த போது, விளையாட்டு வீரர்களுக்கு மாத்திரம் இணைப்புகளையும் சேவைகளையும் வழங்குவதுடன் நிறுத்திவிடாமல், சர்வதேச ரீதியில் இந்த போட்டிக்கு இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு எமது புதிய 3.75G வலையமைப்பு சேவைகளின் மூலம் இணைய மூல ஒளிபரப்பை மேற்கொள்ளவும் முன்வந்துள்ளோம். அத்துடன் இலங்கையின் சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கை பொருளாதாரத்துக்கு கிடைக்கும் அனுகூலங்களுக்கு பங்களிப்பு வழங்கவும் எம்மால் முடிந்துள்ளது” என்றார்.
இலங்கைக்கு இது போன்ற சர்வதேச தரம் வாய்ந்த போட்டி நிகழ்வை கொண்டு வருவதில் பிரதான பங்குவகித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையின் அர்ப்பணிப்பு பாராட்டுதலுக்குரியதென எடிசலாட் அறிவித்துள்ளது.
இலங்கையின் தொலைத்தொடர்புகள் துறையில் சக்திவாய்ந்த நிறுவனமான எடிசலாட், தொடர்ந்தும் இத்துறையில் புதிய பரிமாணங்களில் கால் பதித்த வண்ணமுள்ளது.
அத்துடன், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள், விற்பனை கொடுப்பனவுகள், விசேட இணைப்புகள் மற்றும் இதர பல சேவைகளையும் வழங்கி வருகிறது. எடிசலாட், புதிய கண்டுபிடிப்புகள், தரம் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை வழங்குவதில் முன்னிலையில் திகழ்கிறது.
அத்துடன் 3.75G தொழில்நுட்ப சேவைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியுமுள்ளது. எடிசலாட் இலங்கையில் நிறுவப்பட்டதிலிருந்து 3.5 மில்லியன் வாடிக்கையாளர்களை மிகக்குறுகிய காலப்பகுதியில் கடந்துள்ளது.
தொடர்ந்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் அதிகளவு வாடிக்கையாளர்களை கவர்வது மற்றும் நிறுவனத்தை அதியுயர் நிலைக்கு கொண்டு செல்வது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது (நன்றி அததெரண)