Archive for the ‘Uncategorized’ Category

2040 இல் மட்டக்களப்பின் 20 சதவீத மக்கள் கடல்நீரால் பாதிக்கப்படுவர்


[ சனிக்கிழமை, 05 நவம்பர் 2011, 05:53.05 AM GMT ]

2040ம் ஆண்டளவில் இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் மக்களில் 20 சதவீதமானோர் கடல் நீர் பெருக்கு காரணமாகப் பாதிப்படைவர் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இது குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் நீர்கொழும்பின் 15 சதவீத மக்களும் கடல்நீர் காரணமாக பாதிக்கப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 70 சதவீதமான மக்கள் கரையோரப் பகுதிகளில் உள்ள நகரங்களில் வசிக்கின்றனர்.

இவர்கள் கடல் நீர்மட்ட உயர்வு, வெள்ளப் பெருக்கு, நீர் பற்றாக்குறை, சூறாவளி, வரட்சி போன்றவற்றால் பாதிப்படைந்து வருவதாக மொரட்டுவ பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ்வின்

 

 

 

 

அம்பாறையில் எஸ்.எஸ்.பி.தர பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றார் சார்ஜன்ட்!


அம்பாறையில் எஸ்.எஸ்.பி.தர பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றார் சார்ஜன்ட்!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 11:01.23 AM GMT ]
அம்பாறை மஹாஓயா பிரதேசத்தில் உள்ள 69 ம் விசேட அதிரடிப்படை சோதனை சாவடியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தி;ல் எஸ்.எஸ்.பி தர பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியானார்.

விசேட அதிரடிப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பிரதம சார்ஜன்ட் ஒருவரே எஸ்.எஸ்.பியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் செய்த சார்ஜன்ட் பின்னர் தனக்குத் தானே துப்பாக்கிப் பிரயோகம் செய்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நிலையில் அவர் தற்போது, அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ்வின்

செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பழி தீர்க்க 2.25 இலட்சம் ˜பரை கொலை செய்த அமெரிக்கா


2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயோர்க் நகரில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இது தெரிய வந்துள்ளது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் ,இரட்டை கோபுரம் விமானம் மூலம் தகர்க்கப்பட்டது. (யார் தாக்குதல் நடத்தினர் என்று ஆதாரமில்லாத அந்த பல மர்மங்கள் நிறைந்த அந்த சம்பவத்தை வைத்துகொண்டு )இதைத் தொடர்ந்து அமெரிக்கா, உலகளாவிய தீவிரவாத வேட்டையைத் தொடங்கியது. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், ஏமன் என பல நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் வேட்டையில் இறங்கின.

இதில் ஈராக், ஆப்கானிஸ்தானில்தான் பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தின அமெரிக்கப் படைகள். அமெரிக்கப் படைகள் இதுவரை நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக இந்தத் தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் சிக்கி 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பல்கலைக்கழக தகவல் தெரிவிக்கிறது.

இதில் அமெரிக்க கூட்டுப் படைகளின் தரப்பில் மட்டும் 31 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராணுவத்தினர் ஆவர். இவர்களில் 6000 பேர் அமெரிக்கர்கள், 1200 பேர் கூட்டுப் படையினர், 9900 பேர் ஈராக்கியர்கள், 8800 பேர் ஆப்கானிஸ்தானியர்கள், 3500 பேர் பாகிஸ்தானியர்கள். இவர்கள் தவிர அமெரிக்காவுக்காக பாதுகாப்பு குறித்த தகவல்களைத் திரட்டித் தந்தவர்கள் 2300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பாவி மக்கள்தான் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் ஆவர். இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஈராக்கியர்கள், 35,000 பேர் பாகிஸ்தானியர்கள், 12,000 பேர் ஆப்கானிஸ்தானியர்கள் ஆவர்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 168 பேர் செய்தியாளர்கள், 266 பேர் மனிதாபிமான பணியாளர்கள் ஆவர்.

அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்திய தாக்குதல்களில் சிக்கி இடம் பெயர்ந்து அகதிகளாக உள்ளோரின் எண்ணிக்கை மட்டும் 70.8 லட்சம் பேர் ஆவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

இப்படி அமெரிக்காவின் கேடு கேட்ட போர் வெறி பிடித்த செயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சாபத்திற்கு ஏற்பட்ட ஒரு சிறிய விலையாகவே இன்று அமெரிக்கவின் பொருளாதார பின்னடைவு என்று பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து ஒலிக்கும் சிறிய குரலாக கருதபடுகிறது . நன்றி விடிவெள்ளி

 

 

 

பொத்துவில் கல்வி வலயம்! பொத்துவிலுக்கு மட்டும் ஒரு கனவா?


பொத்துவில் கல்வி வலயம் தொடர்பில் நாம் அடிக்கடி பேசி வருகின்றோம். முன்பு இருந்த கல்வி நிருவாக அலகுகள் எல்லாம் அந்தந்த ஊர்களுக்கென்று ஒரு அலுவலகமாகச் செயற்பட்டு வந்தது. பின்னர் பல கோட்டங்களை ஒன்றிணைத்து ஒரு வலயக்கல்வி அலுவலகத்தின் பேரில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. அனைத்துக் கோட்டங்களில் உள்ள சுயவிபரக் கோவைகளும் வலயக்கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டன.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில், கின்னியா, ஓமரங்கடவல ஆகிய மூன்று கோட்டங்களும்உப வலயக் கல்வி அலுவலகமாக இருக்கும் என சுற்றறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டு இயங்கி வந்தன.

கவலைக்குறிய விடயம் என்னவென்றால், உப வலயமாக இருந்த மூன்று கோட்டங்களுள் பொத்துவிலைத் தவிர மற்ற இரண்டு கோட்டங்களும் வலயக்கல்வி அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டன. பொத்துவிலின் நிலையோ உப வலயத்திலிருந்து கோட்டமாகத் தேய்ந்தது. வழமைபோல  “எவன் பொன்டாட்டி எவனோடு போனால் எனக்கென்ன” என்ற தோரணையில் கல்வி அதிகாரிகள், புத்திஜீவிகள் இருந்துவிட்டனர்.

பின்னர் என்ன? அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தின் கைவரிசை பொத்துவிலின் கல்வியைப் பதம்பார்த்தது. பௌதீக வளமோ, மனித வளமோ சரியாகப் பகிரப்படவில்லை. இதனைத் தட்டிக் கேட்க நாதியற்ற அதிபர்கள்,SDS, கல்வி அபிவிருத்தியில் பங்களிக்கின்றார்களாம்?

அக்கரைப்பற்றுக் கல்விவலயத்தில் ஆசியர் மிதமிஞ்சிக் காணப்படும் அதேவேளை பொத்துவில் கோட்டத்தில் 50ஆசிரியர்களுக்கு மேல் தட்டுப்பாடு நிலவுகின்றது. அக்கரைப்பற்றுக் கல்விவலயத்தினால் இழைக்கப்படும் ஓரவஞ்சனைகளையும் அநீதியையும் சுட்டிக்காட்டி தீர்வு காண முற்பட்டபோதெல்லாம், வலயக்கல்விப் பணிப்பாளருக்கு வால்ப்பிடிக்கும் பல அதிபர்களும் சில ஆசிரியர்களும் அப்படியொரு பிரச்சினை இங்கில்லலை என வக்காலத்துவாங்கி அத்தனை முயற்சிகளையும் தகர்த்தனர். இவர்களின் ஊர்ப்பற்றையும் கல்வித்தாகத்தையும் என்னென்று சொல்வது.

இந்நிலையில் கோட்டத்தைப் பாரமெடுத்த ஜனாப் M.I.M. முத்தலிப் பிதிக்கல்விப் பணிப்பாளர் அவர்கள். உப வலயத்திலிருந்து கோட்டமாகத் தேய்ந்த அலுவலகத்தினை மீண்டும் உபவலயமாகக் கொண்டுவருவதில், மாகாணக்கல்விப் பணிப்பாளரின் உதவியுடன் அயராது பாடுபட்டார் என்பதை நன்றியுனர்வுடன் தெரிவிக்கின்றேன்.

பொத்துவிலுக் கென்று ஒரு வலயக்கல்வி அலுவலகம் தேவை என ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் அதேவேளை இவ்விடயத்தில் மாகாண சபையில் SSP அப்துல் மஜித் அவர்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதையும் நன்றியுணர்வுடன் குறிப்பிட வேண்டியுள்ளது.இருந்தபோதும் காரியம் எதுவும் கைகூடவில்லை.ஆனால் உப வலயமே இல்லாத திருக்கோவிலுக்கு வலயம், படுவான்கரைக்கு வலயம் கொடுக்கப்பட்டது. இது தமிழ்அரசியல்வாதிகளின் சாதனை. ஆனால் எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்மூடி நித்திரைகொள்கின்றனர். தேர்தல் வரும்போது மட்டும் விழித்துக்கொள்வார்கள்.

பொத்துவில்  கல்வி வலயத்தை சுகப்பிரசவமாகவோ அல்லது சத்திரசிகிச்சைப் பிரசவமாகவோ பெற்றுக்கொள்வது பொத்துவில் மண்ணின் மைந்தர்களாகிய எம்மீது கடமையாகும். நேரம் வரும்போது உங்களது ஒத்துழைப்பைக் கட்டாயம் வழங்குங்கள். பேஸ்புக்கில் பொத்துவில் கல்வி வலயம் என ஒன்றை அன்பர் ஒருவர் உருவாக்கிருக்கின்றார் அம்முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். அன்பர்களே கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள். இது எனது 100 ஆவது இடுகையாகும் (post) இதுவரைகாலமும் பொத்துவில் மண்ணுடன் இணைந்திருந்த அணைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

 

 

புரோ சேர்பிங் 2011 அறுகம்பையில்


தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக அறுகம்பே பகுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புரோ சேர்பிங் 2011 (Pro surfing Competition 2011) கடல்சருக்கல் போட்டி நிகழ்வுக்கு பிரதான தொலைத் தொடர்பு சேவைகள் வழங்குநர் அனுசரணையை வழங்க எடிசலாட் முன்வந்துள்ளது.

இதன் மூலம் அறுகம்பே பகுதியில் இடம்பெறும் இந்த களியாட்ட நிகழ்வில் கலந்துகொள்ள வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களுக்கு தொலைத்தொடர்பு, இணைய சேவைகளை வழங்க எடிசலாட் தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலிய கடல்சருக்கல் வல்லுநர்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதான அனுசரணையில் இந்த கடல்சருக்கல் போட்டி ஓகஸ்ட் 30ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

இந்நிகழ்வில் 19 நாடுகளைச் சேர்ந்த கடல்சருக்கல் வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் விளையாட்டு துறைக்கு தொடர்ச்சியாக பல அனுசரணைகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்கும் எடிசலாட், ஏ பிரிவு ரகர் போட்டிகளில் கண்டி விளையாட்டு கழகம், கோல்ப் கிளாசிக் போன்ற வரிசையில் தனது மற்றுமொரு அனுசரணையாக இந்த கடல்சருக்கல் போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியல் இணையம் மூலம் இந்த போட்டிகளை ஒளிபரப்பு செய்ய தனது 3.75 G வலையமைப்பு சேவைகளையும் வழங்கவுள்ளது. இந்த விளையாட்டு நிகழ்வுகளின் போது உள்நாட்டு பார்வையாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அறுகம்பே பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காகவும் பட்டம் வடிவமைக்கும் போட்டி, மணல் வீடு கட்டும் போட்டிகளையும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கு எடிசலாட் அனுசரணை வழங்குவது குறித்து எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் விளையாட்டு துறைக்கு பங்களிப்பு வழங்கவும் எமக்கும் பெருமையளிக்கிறது. விளையாட்டு போட்டிகளிலிருந்து கிடைக்கும் போட்டித்தன்மையும் அனுபவத்தையும் அடிப்படையாக கொண்டே வர்த்தக நடவடிக்கைகளிலும் அவை முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் விளையாட்டு துறைக்கு அனுசரணை வழங்குவது முக்கியமானதென நாம் கருதுகிறோம். இந்த போட்டி நிகழ்வுக்கு அனுசரணை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்த போது, விளையாட்டு வீரர்களுக்கு மாத்திரம் இணைப்புகளையும் சேவைகளையும் வழங்குவதுடன் நிறுத்திவிடாமல், சர்வதேச ரீதியில் இந்த போட்டிக்கு இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு எமது புதிய 3.75G வலையமைப்பு சேவைகளின் மூலம் இணைய மூல ஒளிபரப்பை மேற்கொள்ளவும் முன்வந்துள்ளோம். அத்துடன் இலங்கையின் சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கை பொருளாதாரத்துக்கு கிடைக்கும் அனுகூலங்களுக்கு பங்களிப்பு வழங்கவும் எம்மால் முடிந்துள்ளது” என்றார்.

இலங்கைக்கு இது போன்ற சர்வதேச தரம் வாய்ந்த போட்டி நிகழ்வை கொண்டு வருவதில் பிரதான பங்குவகித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையின் அர்ப்பணிப்பு பாராட்டுதலுக்குரியதென எடிசலாட் அறிவித்துள்ளது.

இலங்கையின் தொலைத்தொடர்புகள் துறையில் சக்திவாய்ந்த நிறுவனமான எடிசலாட், தொடர்ந்தும் இத்துறையில் புதிய பரிமாணங்களில் கால் பதித்த வண்ணமுள்ளது.

அத்துடன், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள், விற்பனை கொடுப்பனவுகள், விசேட இணைப்புகள் மற்றும் இதர பல சேவைகளையும் வழங்கி வருகிறது. எடிசலாட், புதிய கண்டுபிடிப்புகள், தரம் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை வழங்குவதில் முன்னிலையில் திகழ்கிறது.

அத்துடன் 3.75G தொழில்நுட்ப சேவைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியுமுள்ளது. எடிசலாட் இலங்கையில் நிறுவப்பட்டதிலிருந்து 3.5 மில்லியன் வாடிக்கையாளர்களை மிகக்குறுகிய காலப்பகுதியில் கடந்துள்ளது.

தொடர்ந்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் அதிகளவு வாடிக்கையாளர்களை கவர்வது மற்றும் நிறுவனத்தை அதியுயர் நிலைக்கு கொண்டு செல்வது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது (நன்றி அததெரண)

இலங்கையில் பேஸ்புக் வலையமைப்பில் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பில் 1100 முறைப்பாடுகள்


சமூக வலையமைப்புகளில் பரவலாகப் பேசப்படும் பேஸ்புக் இணையத்தளத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் 1100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவின் பிரதான பொறியியலாளர் ரோஹன பள்ளியகுருகே வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இணையத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர் சைபர் க்ரைம் எனப்படும் இணையத்தளக் குற்றங்களின் அதிகரிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

“பேஸ்புக் கணக்குகளை முடக்குதல், தனி நபர்களால் தரவேற்றப்படும் படங்களை தவறான முறையில் பயன்படுத்துதல், தனி நபர்களின் பெயர்களை குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்துதல், பலவந்தமாகப் பணம் பெறுதல் போன்ற சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்றன.

எமக்கு நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. தற்போது பேஸ்புக் வலையமைப்பில் உருவாக்கப்பட்டுவரும் ‘கிறீஸ் மனிதன்’ கணக்குகளை இடைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.(நன்றி வீரகேசரி)

முல்லா ஒமர் இறக்கவில்லை: தலிபான்களின் தொடர்பாடல் வலையமைப்பினுள் அமெரிக்கா கைவரிசை


தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா மொஹமட் ஒமர் உயிருடன் உள்ளதாகவும் அவர் இறந்துவிட்டதாக வெளியாகிய செய்தி பொய்யானதெனவும் அவ்வமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவ்வமைப்பு தமது கையடக்கத்தொலைபேசி மற்றும் இணையக் கட்டமைப்புக்கள் ‘ஹெக்கிங்’ செய்யப்பட்டுள்ளதுடன் அதனூடாகவே இவ்வதந்தி பரப்பப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரே இதற்கு முழுப்பொறுப்பெனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. முல்லா ஒமர் உயிரிழந்து விட்டதாக அவ்வமைப்பின் பேச்சாளர்களான சபியுல்லா முஜாஹிட் மற்றும் குஹாரி மொஹமட் யூசுப் ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து குறுஞ்செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இச்செய்தி பொய்யானதென அவர்கள் இருவரும் மறுத்திருந்தனர். மேலும் இது தொடர்பில் அவர்களது மின்னஞ்சல்கள் முகவரியில் இருந்து செய்திகள் அனுப்பப்பட்டிருந்ததுடன், இணையத்திலும் இச்செய்தி பரவவிடப்பட்டிருந்தது.( நன்றி விடிவெள்ளி)

 

பிரிட்டனில் பகல் நேர வெளிச்சத்தில் வானத்தில் பறந்த மர்ம வட்டத்தட்டு


[ வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2011, 05:52.22 மு.ப GMT ]
பிரிட்டனில் பகல் வெளிச்சத்தில் பளிச் என ஒளி விடும் மர்ம வட்டு தட்டு பறந்து சென்றது. இந்த வித்தியாசமான காட்சியை பார்த்த பி.பி.சி.யின் நிருபர் வீடியோ எடுத்துள்ளார்.அந்த மர்ம தட்டு மேக கூட்டம் நிறைந்த பகுதியில் சீறி பாய்ந்து சென்றது. அதிவேகத்துடன் சீறிச்சென்ற அந்த பொருள் சில வினாடியில் கண்ணை விட்டு மறைந்தது.

அந்த பொருள் நிச்சயம் விமானம் இல்லை என படம் பிடித்த 36 வயது கமெரா மேன் அல்வினால் தெரிவித்தார். விளையாட்டு செய்தியாளர் மைக் செவல் 5 நாட்களுக்கு முன்னர் தான் அது போன்ற மர்ம பொருள் ஒன்று வானில் பறப்பதை பார்த்தார்.

அந்த காட்சி ஹெர்ட்ஸ் பகுதியில் உள்ள கோடர்டு கிராமத்தில் காணப்பட்டது. சில மைல் தொலைவு தூரத்தில் அந்த மர்ம பொருள் சத்தத்துடன் பறந்து சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மைக் ஸ்வெல் ரேடியோ 5 நிறுவனத்திற்காக பணியாற்றுகிறார். அவரும் வானில் பறந்த மர்ம தட்டு ஒளிவெள்ளத்துடன் வட்ட வடிவத்தில் இருந்தது என உறுதிப்படுத்தினார்.

தற்போது வானில் பறந்த சென்ற மர்ம வட்ட தட்டு எசக்சின் தெற்கு பகுதியான ஸ்டான்ஸ் டெட் விமான நிலையம் அருகே காணப்பட்டது. அது வானத்தில் இருந்து தரையை நோக்கி சீறி வருவதை போல இருந்தது என செய்தியாளர் அல்வினால் தெரிவித்தார். நன்றி லங்காசிறி

 

மௌஜூன் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் பெருந்திரளான மக்கள் பங்குபற்றலுடன் நடைபெற்றது. அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு


ஆயுதப் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்த ஜனாப் மௌஜூன் அவர்களின் ஜனாஸா முன்னர் குறிப்பிட்டது போல் இன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் வீட்டில் தொழுகை நடாத்தப்பட்டு கொடிமரத்தடி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸாவில் அமைச்சர் ரவூப் ஹகீம்,அப்துல் மஜீத்,அப்துல் வாசித், பொளசி,அதாஉல்லா, பைஸல்காசிம், ஹிஸ்புல்லா, ஜமீல்,ஜவாத்,மாஹிர்,உவைஸ் ஆகிய அரசியல் பிரமுகர்கள் சகிதம் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஜனாஸா தொழுகையின் பின் உருக்கமான துஆ பிரார்த்தனை இடம் பெற்றது. அவ்வேளையில் அனைவரும் துயர் தாங்காது கண்ணீர் மல்க ஆமீன் சொன்னமையானது உள்ளத்தை நெகிழ வைக்கும் சம்பவமாக காணப்பட்டது.

அல்லாஹுத்தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக! ஆமீன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கைகள் இல்லாத சிறுவன் பந்து வீச்சாளராக தெரிவாகி சாதனை


கைகள் இல்லாத சிறுவன் பந்து வீச்சாளராக தெரிவாகி சாதனை
கைகள் இல்லாத பள்ளி சிறுவன் நட்சத்திர கிரிக்கட் வீரராக தெரிவாகி புதிய சாதனை படைத்து இருக்கிறான்.கிரிக்கட்டில் சுழல் பந்து வீச்சு என்றாலே பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நடுக்கம் இருக்கும். பந்து காற்றில் தள்ளாடி வருவதைப் போல தரையில் விழுந்தவுடன் விக்கெட்டை நோக்கி வேகமாக திரும்பும்.

அப்படி வரும் பந்தை தடுக்க தவறினால் ஸ்டம்ப் கீழே விழும். துடுப்பாட்ட வீரர்கள் பெவிலியனுக்கு நடைகட்ட வேண்டியது தான். இந்த அருமையான சுழல்பந்து வீச்சாளராக 11 வயது சிறுவன் கெரன்டஸ் கிப்ஸ் திகழ்கிறான்.

இந்த சிறுவனுக்கு பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லை. இருந்தாலும் வலது கை பகுதியில் பந்தை மிக இறுக்கமாக பிடித்து மிக நேர்த்தியாக பந்தை வீசுகிறான். அவனது பந்து வீச்சுத்திறனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அங்கீகரித்து உள்ளது.

ஹொலிடே கடற்கரை கிரிக்கட் போட்டிகளின் போது கெரனின் திறமையை உறவினர்கள் கண்டுபிடித்தனர். இந்தச் சிறுவன் தற்போது வொர்சஷயரில் உள்ள ரெட்டிச் உள்ளூர் கிளப்பில் ஆடுகிறான்.

என்னால் இந்த அளவு சிறப்பாக ஆட முடியுமோ அதனை வெளிப்படுத்த ஆடச் செல்கிறேன் என சிறுவன் உறுதியுடன் கூறுகிறான். இந்த சிறுவனின் திறமை குறித்து 29 வயது தாய் கேரி கூறுகையில்,”உடல் ஊனம் அவனை பின்னடைய செய்யவில்லை. அவனது நம்பிக்கையை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.

நன்றி லங்காசிறி