Posts Tagged ‘வரட்சி’

2040 இல் மட்டக்களப்பின் 20 சதவீத மக்கள் கடல்நீரால் பாதிக்கப்படுவர்


[ சனிக்கிழமை, 05 நவம்பர் 2011, 05:53.05 AM GMT ]

2040ம் ஆண்டளவில் இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் மக்களில் 20 சதவீதமானோர் கடல் நீர் பெருக்கு காரணமாகப் பாதிப்படைவர் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இது குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் நீர்கொழும்பின் 15 சதவீத மக்களும் கடல்நீர் காரணமாக பாதிக்கப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 70 சதவீதமான மக்கள் கரையோரப் பகுதிகளில் உள்ள நகரங்களில் வசிக்கின்றனர்.

இவர்கள் கடல் நீர்மட்ட உயர்வு, வெள்ளப் பெருக்கு, நீர் பற்றாக்குறை, சூறாவளி, வரட்சி போன்றவற்றால் பாதிப்படைந்து வருவதாக மொரட்டுவ பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ்வின்