வைரஸ் தாக்கிய பென்டிரைவை போர்மட் செய்வதற்கு


[ வெள்ளிக்கிழமை, 04 நவம்பர் 2011, 04:24.05 மு.ப GMT ]
நாம் சில சமயம் பென்டிரைவை போர்மட் செய்ய முற்படுகையில் முடியாமல் இருக்கும். இதற்கு காரணம் பென்டிரைவில் காணப்படும் நச்சு நிரல்களே(Virus) ஆகும்.இதனை கீழ்வரும் முறைகளை பின்பற்றி சரிசெய்ய இயலும். முதலில் போர்மட் செய்யும் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்.

1. உங்கள் MyComputer Iconல் Right Click செய்யவும். அதில் Manage என்பதை Click செய்யவும். அதில் Disk Management செல்லவும்.

2. பின்னர் அதில் உள்ள உங்கள் பென்டிரைவ் Iconல் Right click செய்து Change Drive Letter And Paths கிளிக் செய்யவும். பின்னர் அதில் உள்ள Drive Letterல் உள்ள எழுத்தை வேறு எழுத்தாக மாற்றி Ok கிளிக் செய்யவும்.

பின்னர் உங்கள் Drive Letter மாற்றப்பட்டிருப்பதை அறிவீர்கள். பின்னர் அதில் Right Click செய்து Format என்பதை கொடுக்கவும். பின்னர் Format ஆக ஆரம்பிக்கும்.

 

 


கண்பார்வையை அதிகரிக்கும் மென்பொருள்
[ சனிக்கிழமை, 05 நவம்பர் 2011, 12:50.11 மு.ப GMT ]
iPhone மற்றும் கணணியைப் அதிக நேரம் பார்ப்பதால் ஒருவரது கண்பார்வை பாதிக்கப்படும் என்பது பொதுவாக நாம் அறிந்த விடயம். ஆனால் மாறாக அவை ஒருவரது கண் பார்வை முன்னேற்றத்திற்கு உதவும் என்பது நம்மில் அநேகரை ஆச்சரியப்பட வைக்கின்றது.நடுத்தர வயதானவர்களின் பார்வையை இன்னும் 10 வயது குறைத்து நன்றாகத் தோற்றமளிக்கச் செய்யும் ஒரு மூளைப்பயிற்சியாக மென்பொருள் அமையும் என கூறப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்ணாடி பயன்படுத்துபவர்களால் 2 வரிகளுக்கு மேலாகக் கண்ணாடியில்லாமல் வாசிக்கமுடிகின்றது என்றும், ஏற்கனவே கண்ணாடி பயன்படுத்தி வாசிப்பவர்களால் அதன் பாவனையைக் குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் அடுத்த வருடத்தின் முற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. ஆரம்பத்தில் கையடக்கத் தொலைபேசியின் மென்பொருளாகவே வருமென்றும் அதன்பின்னரே கணணிகளுக்கென இவை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த மென்பொருள் அமெரிக்க நிறுவனமான Ucansi னால் உருவாக்கப்படுகின்றது. இதில் முதலில் ஒரு சாம்பல்நிறத் திரையைப் பார்க்கலாம். அதில் ஒரு வெள்ளை வட்டம் இருக்கும். அடுத்து விரைவாகப் பல இடங்களில் பல பிம்பங்கள் தோன்றும். இவற்றில் சில வெற்றிடமாகவும் சில கலங்கலான கோடிட்ட வடிவங்களாகவும் இருக்கும்.

இதன் இலக்கு வெற்றிடமான இடங்களைத் தெரிந்தெடுத்து அதில் அந்த வட்டதை வைப்பதுதான். ஒருவர் நன்றாகச் செயற்பட செயற்பட இப்பணி வேகமாகவும் சிரமமானதாகவும் மாறும். கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்தப் பரிசோதனை ஆராய்ச்சியில் சராசரி 51 வயதானவர்கள் சுமார் 40 பாடங்களில் பங்குபெற்றனர்.

முதல் 3 மாதங்களுக்கு இதன் விலை 60 பவுண்களாக இருக்கும் என அந் நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில் வாரத்தில் 3 தடவைகள் வீதம் 15 நிமிடம் ஒரு வாடிக்கையாளர் பயிற்சியளிக்கப்படும். அதன்பின்னர் இவை மாதாந்திரக் கட்டணமாக மாறும். பிரித்தானியர்கள் வலமையாக ஒரு வருடத்தில் கட்பார்வை உற்பத்திக்காக 2.7 பில்லியன் பவுண்களைச் செலவழிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி லங்கா சிறி

 

 

 

2040 இல் மட்டக்களப்பின் 20 சதவீத மக்கள் கடல்நீரால் பாதிக்கப்படுவர்


[ சனிக்கிழமை, 05 நவம்பர் 2011, 05:53.05 AM GMT ]

2040ம் ஆண்டளவில் இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் மக்களில் 20 சதவீதமானோர் கடல் நீர் பெருக்கு காரணமாகப் பாதிப்படைவர் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இது குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் நீர்கொழும்பின் 15 சதவீத மக்களும் கடல்நீர் காரணமாக பாதிக்கப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 70 சதவீதமான மக்கள் கரையோரப் பகுதிகளில் உள்ள நகரங்களில் வசிக்கின்றனர்.

இவர்கள் கடல் நீர்மட்ட உயர்வு, வெள்ளப் பெருக்கு, நீர் பற்றாக்குறை, சூறாவளி, வரட்சி போன்றவற்றால் பாதிப்படைந்து வருவதாக மொரட்டுவ பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ்வின்

 

 

 

 

கடாபி புகைப்படம் மூலம் வைரஸ் பரவும் அபாயம்


[ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 02:08.35 பி.ப GMT ]
லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டதை பரபரப்பாக பேசப்படும் நிலையில் அவரது புகைப்படத்தோடு கணணியை முடக்கச்செய்யும் வைரஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்தகவலை பிரபல கணணி பாதுகாப்பு நிறுவனமான சோப்ஸின் தொழில்நுட்ப ஆலோசகர் கிரஹாம் குலுலி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் லிபிய அதிபர் காடபியின் புகைப்படத்தில், கணணியை பாதிக்கக்கூடிய வைரஸ்கள் இருப்பதாகவும், இந்த மின்னஞ்சலை திறந்தால் கணணி செயல்பாட்டை முடக்கச்செய்யும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கணணியில் உள்ள தகவல்களை திருடவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதால், இந்த புகைப்படத்தை பற்றி சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.நன்றி லங்காசிறி

 

 

பல் சொத்தையால் குடல் புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்


[ வியாழக்கிழமை, 20 ஒக்ரோபர் 2011, 10:18.48 மு.ப GMT ]
பொதுவாக மனிதர்களை மார்பக மற்றும் நுரையீரல் புற்று நோய் தாக்கி வருகிறது. அதற்கு அடுத்த நிலையில் குடல் புற்று நோய் உள்ளது.இந்த குடல் புற்று நோய் எப்படி உருவாகிறது என கண்டறிய முடியவில்லை. எனவே ஆராய்ச்சி நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.பல் சொத்தை மற்றும் தோலில் புண் போன்றவற்றை ஒரு வித பாக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன. அந்த கிருமிகளுக்கும், குடல் புற்று நோய்க்கும் சம்பந்தம் இருக்கலாம் என கண்டு பிடித்துள்ளனர். இந்த புற்று நோய் வருவதை முன் எச்சரிக்கையுடன் தடுக்க முடியும்.

உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளுதல், இறைச்சியை குறைந்த அளவு சாப்பிடுதல், நார்சத்து உணவை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றால் குடல் புற்று நோய் வராமல் தடுக்கலாம். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த புற்று நோய் ஆராய்ச்சி நிபுணர் சாரா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.நன்றி லங்காசிறி

 

மருதாணியின் மருத்துவ குணங்கள்


[ சனிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2011, 12:52.47 பி.ப GMT ]
மருதாணி என்ற மூலிகையை தெரியாத பெண்களே இருக்கமாட்டார்கள். பெரும்பாலான பெண்கள் அழகுக்காக மட்டும் பயன்படுத்தினாலும் உண்மையில் இதற்குள் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.கூந்தல் செழிப்பாக வளர சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

இந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் செழிப்பாகும்.தலைவழுக்கையும் மறையும். நீடித்த தலைவலி நீங்கும்.

ஹிஸ்டீரியா நோய் தாக்கப்பட்ட பெண்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இவர்கள் மருதாணிப்பூவை தலையில் சூடி வந்தால் நோய் குறையும், தூக்கம் வரும்.

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.

மருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும்.

கால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெயில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும்.

காலில் தோன்றக்கூடிய கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். நாள்பட்ட நீர் ஒழுகும் எக்ஸிமா என்னும் புண்களுக்கு மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும். நன்றி லங்காசிறி

 

அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் மட்டம் 2 அடி உயரும்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்


பூமி வெப்பமயமாகி வருவதால் அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என கோபன்ஹெகன் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் இதர சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது.

இதனால் அட்லான்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது உள்ள நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 2 அடியும், அதற்கடுத்த 4 ஆண்டுகளில் 6 அடியும் உயரும்.

இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடல் மட்டம் சில இடங்களில் உயர்வதாலும், சுனாமி ஏற்படுவதாலும் சிறிய தீவுகள் காணாமல் போவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நன்றி லங்காசிறி

 

வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்


[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 10:23.48 மு.ப GMT ]
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நன்றி லங்கா சிறி

 

அம்பாறையில் எஸ்.எஸ்.பி.தர பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றார் சார்ஜன்ட்!


அம்பாறையில் எஸ்.எஸ்.பி.தர பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றார் சார்ஜன்ட்!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 11:01.23 AM GMT ]
அம்பாறை மஹாஓயா பிரதேசத்தில் உள்ள 69 ம் விசேட அதிரடிப்படை சோதனை சாவடியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தி;ல் எஸ்.எஸ்.பி தர பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியானார்.

விசேட அதிரடிப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பிரதம சார்ஜன்ட் ஒருவரே எஸ்.எஸ்.பியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் செய்த சார்ஜன்ட் பின்னர் தனக்குத் தானே துப்பாக்கிப் பிரயோகம் செய்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நிலையில் அவர் தற்போது, அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ்வின்

செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பழி தீர்க்க 2.25 இலட்சம் ˜பரை கொலை செய்த அமெரிக்கா


2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயோர்க் நகரில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இது தெரிய வந்துள்ளது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் ,இரட்டை கோபுரம் விமானம் மூலம் தகர்க்கப்பட்டது. (யார் தாக்குதல் நடத்தினர் என்று ஆதாரமில்லாத அந்த பல மர்மங்கள் நிறைந்த அந்த சம்பவத்தை வைத்துகொண்டு )இதைத் தொடர்ந்து அமெரிக்கா, உலகளாவிய தீவிரவாத வேட்டையைத் தொடங்கியது. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், ஏமன் என பல நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் வேட்டையில் இறங்கின.

இதில் ஈராக், ஆப்கானிஸ்தானில்தான் பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தின அமெரிக்கப் படைகள். அமெரிக்கப் படைகள் இதுவரை நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக இந்தத் தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் சிக்கி 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பல்கலைக்கழக தகவல் தெரிவிக்கிறது.

இதில் அமெரிக்க கூட்டுப் படைகளின் தரப்பில் மட்டும் 31 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராணுவத்தினர் ஆவர். இவர்களில் 6000 பேர் அமெரிக்கர்கள், 1200 பேர் கூட்டுப் படையினர், 9900 பேர் ஈராக்கியர்கள், 8800 பேர் ஆப்கானிஸ்தானியர்கள், 3500 பேர் பாகிஸ்தானியர்கள். இவர்கள் தவிர அமெரிக்காவுக்காக பாதுகாப்பு குறித்த தகவல்களைத் திரட்டித் தந்தவர்கள் 2300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பாவி மக்கள்தான் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் ஆவர். இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஈராக்கியர்கள், 35,000 பேர் பாகிஸ்தானியர்கள், 12,000 பேர் ஆப்கானிஸ்தானியர்கள் ஆவர்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 168 பேர் செய்தியாளர்கள், 266 பேர் மனிதாபிமான பணியாளர்கள் ஆவர்.

அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்திய தாக்குதல்களில் சிக்கி இடம் பெயர்ந்து அகதிகளாக உள்ளோரின் எண்ணிக்கை மட்டும் 70.8 லட்சம் பேர் ஆவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

இப்படி அமெரிக்காவின் கேடு கேட்ட போர் வெறி பிடித்த செயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சாபத்திற்கு ஏற்பட்ட ஒரு சிறிய விலையாகவே இன்று அமெரிக்கவின் பொருளாதார பின்னடைவு என்று பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து ஒலிக்கும் சிறிய குரலாக கருதபடுகிறது . நன்றி விடிவெள்ளி